May 16, 2014

யாழ். கீரிமலை கடற்கரைப் பகுதியில் சடலம் அடையாளம் காணப்பட்டது!

யாழ். கீரிமலை கடற்கரைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை  கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நுவரெலியா, ராகலையைச் சேர்ந்த ராஜன் கிருஷ்ணசாமி (வயது 60) என்பவரின் சடலம் கரையொதுங்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற இவர், கடற்கரையிலிருந்து அருந்திய  குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.இவரது சடலம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.



No comments:

Post a Comment