May 7, 2014

நெதர்லாந்தில் தேசியநாள் 2014ம் ஆண்டுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்

நெதர்லாந்தில் தேசியநாள் 2014ம் ஆண்டுக்கானஉதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் 04-05-2014ஞாயிற்றுக்கிழமை வாகனிங்கன் நகரில் வெகுசிறப்பாகநடைபெற்றது. பொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என ஆரம்பநிகழ்வுகளைத் தொடர்ந்துசுமார் 11.00மணியளவில் உதைபந்தாட்டங்கள் ஆரம்பித்தன. 5கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள் வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது. இறுதியில்


3ம் இடத்தினை அம்ஸ்ரர்டாம்தமிழர் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தினை டென்கெல்டர்தமிழர் விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை ஸ்காகன் தமிழர்விளையாட்டுக்கழகமும்

பெற்றுக் கொண்டன.    

 
பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய சிறப்பாகநடைபெற்ற இப்போட்டிகள் சுமார் 8.00 மணியளவில் வெற்றிபெற்றகழகங்களிற்குவெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டுஅனைவரின் கைதட்டலுடன் இனிதேநிறைவுற்றது.












No comments:

Post a Comment