April 15, 2014

ஐரோப்பா வானொலி பெருமையுடன் வழங்கும் சிவன்ஜீவ் அவர்களின் "உ" இறுவெட்டு எதிர் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகிறது.


ஐரோப்பா வானொலி பெருமையுடன் வழங்கும் சிவன்ஜீவ் அவர்களின் "உ" இறுவெட்டு எதிர் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகிறது.

அதன் முன்னோட்டமாக இறுவெட்டு உருவான விதம் பற்றி கலைஞ்சர்களின் கலந்துரையாடலும், இரு வெட்டு பற்றி பல சுவாரஷ்ய கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளும் காணொளி வடிவில் வெளியாகியுள்ளது.
இவ் இறுவெட்டை, ஐரோப்பா வானொலியும், செந்தளிர் இசை கலையர்களும் தயாரிப்பில் சிவஜீவ் சிவராம் அவர்களின் இசையில் வெளியாகவுள்ளது. இவ் இறுவெட்டை ஒருன்கினைப்பாளர்களாக, சுதன் டேவிட், ஈழ மயூரன், தேவன் மற்றும் ஆரூரன் ராஜ.
இவ் இறுவெட்டில் நோக்கம் என்பது ஐரோப்பா மண்ணில் வாழும் கலைஞ்ர்கள், குறிப்பாக ஜெர்மன் நாட்டின் கலைஞ்சர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களர்த்து திறமைகளை உலகறிய செய்வது தான் எமது நோக்கம் என்றும்.
மிக தரமான, திறமையான பாடல்களை இசையமைப்பாளர் சிவன்ஜீவ் அவர்கள் உருவாக்கியுள்ளார் என்றும் , பாடகர்கள் தென் இந்திய பாடல்களுக்கு நிகரான தரத்துடன் முயற்சித்துள்ளார்கள் என்றும் இந்த இசைதட்டில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஆரூரன் ராஜ அவர்கள் கானொளியில் விளக்கியுள்ளார்.
இவ் இறுவெட்டில், துள்ளல் இசை, காதல் பாடல்கள், ஜனரஞ்சக பாடல்களோடு இளையோர் சமுதாயம் சந்திக்க இருபதாக தேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான இறுவெட்டு ஒன்றை உருவாக்குவதற்கு நீண்ட கால கனவு, ஆனால் அதற்கான நேரமும் காலமும் அமைந்துள்ளதாக கூரியுள்ளனர்.
கிருதிக சிவராம், பட்டு எமிளியான்ஸ்,கடும் குரல் கியூ, நிரு, அனுசிய கண்ணன் சுமங்கலியா, பாபு சிவநாதன், ஆகியோர் இவ் இறுவெட்டில் பனியாற்றியுள்ளார்கள். தேவன், சுதன்,டெயோன், மற்றும் சிவஜீவ் ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளார்கள்.
சாதரணமான இறுவேட்டாக இல்லாமல், தமிழ் மொழிக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் முதல் ஓர் பாடல் அமைவதாகவும், தமிழ் மொழியின் அழகான உச்சரிப்புடன் இருபதாக கூறியுள்ளார்கள்.
மொத்தமாக 12 பாடல்கள் இவ் இறுவெட்டில் இருபதகாவும், தமிழின் பெருமை சேர்க்கும் பாடலாக ஓர் பாடலும், காதல் பாடலும், இளையோர்களை அறிவுரை கூறும் வகையிலான பாடலகாவும், நண்பர்களுக்கான பாடல் என்று வித்தியாசமான பிரிவுகளில் பாடல் செய்துள்ளதாக இசையமைப்பாளர் சிவன்ஜீவ் அவர்கள் கூரியுள்ளார்.
நண்பர்களாக அப்பா டக்கர் என்ற தலைப்பிலும் ஓர் பாடல் உருவாகியுள்ளது.என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணர்ச்சி பூரவமாகவும், இயழ்பான கருத்துக்களையும், பணியாற்றிய அனுபவங்களையும் பகிந்து கொள்ளும் காணொளி யாகவும், சின்ன சின்ன ரகளைகள், சுவர்ஷ்ய முன்னோட்டங்கள் என்று இளையோர்களால் உருவாக்கப்பட்ட இவ் இறுவெட்டுக்கு மக்களின் ஆதரவை நாடி நிற்கிறார்கள்.
இவ் இசை இறுவெட்டை, வேண்டி கேட்குமாறும், மீள் பதிவு செய்தோ, அல்லது வேறு தவறான முறையிலோ கேட்காமல், நேர்மையான முறையில் பெற்று கேட்டு மகிழுமாறு பாடல் குழுவினர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
ஆகவே இவ்வாறன் அரிதான படைப்புகளுக்கு நிச்சயம் மக்கள் அதரவு கரம் கொடுபதோடு, பல கலைஞர்களை ஒன்று திரட்டி எடுத்திருக்கும் இவ் சவாலை மதிக்கும் இசை சமூகம் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இசையமைப்பாளர், சிவன்ஜீவ் அவர்களுக்கும் , ஒருங்கிணைப்பாளர்கள்,பாடகர்கள் அனைவருக்கும் உங்கள் நேரங்களை ரசனையாளர்களுக்கு பரிசாக கொடுக்க முன் வந்த இவ் இறுவெட்டின் கலைஞர்கள அனைவருக்கும் தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள்.
முக்கியமாக கலைஞர்கள அனைவரும் அழகான தமிழில் கருத்துக்களை பகிர்ந்து  கொண்டமையே, இறுவெட்டின் தரத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது, வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment