July 5, 2016

5 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நாவலடிப் பகுதியில் 45 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (04) இரவு விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கஞ்சா பரிமாறுவதாக விசேட குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வீடொன்றில் கஞ்சாவை மறைத்து விற்பனை செய்வதாகவும், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment