அம்பாறையின் வட்டமடு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை
விவசாயிகளுக்கும், பொலிஸாருக்கிமிடையில் முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளது. தமக்கு சொந்தமான காணிகளில் வட்டமடு பிரதேச
விவசாயிகள் உழவு நடவடிக்
கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த பொலிசார் அதனை தடுக்க முற்பட்டதால் இந்த முறுகல் ஏற்பட்டது. முறுகல் முற்றி அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த டிகோவிட்ட, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுபி.தென்னக் கோன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர் கொண்ட குழுவினர் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
வட்டமடு விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்குமிடையிலான பிரச்சினைகள் பல வருடங்களாகத் தொடர்ந்து செல்வதுடன், இப்பிரச்சினைகள் தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் மற்றும் கல்முனை மேல்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டு இறுதியாக தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கல்முனை மேல்நீதிமன்றத்தினால் விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வட்டமடு விவசாயிக ளினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கல்முனை மேல்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 05.05.2015 வரையும், பின்னர் அதிலிருந்து எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விவசாயம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதனை சட்டத்தரணி எஸ்.எம்.றகீப் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இதன்போது கொண்டுவந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமனந்த டிகோவிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, நிலைமை சுமுகமடைந்தது.
கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த பொலிசார் அதனை தடுக்க முற்பட்டதால் இந்த முறுகல் ஏற்பட்டது. முறுகல் முற்றி அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த டிகோவிட்ட, திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுபி.தென்னக் கோன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர் கொண்ட குழுவினர் களத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
வட்டமடு விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்குமிடையிலான பிரச்சினைகள் பல வருடங்களாகத் தொடர்ந்து செல்வதுடன், இப்பிரச்சினைகள் தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் மற்றும் கல்முனை மேல்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டு இறுதியாக தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கல்முனை மேல்நீதிமன்றத்தினால் விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வட்டமடு விவசாயிக ளினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கல்முனை மேல்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 05.05.2015 வரையும், பின்னர் அதிலிருந்து எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை விவசாயம் மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளதனை சட்டத்தரணி எஸ்.எம்.றகீப் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இதன்போது கொண்டுவந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமனந்த டிகோவிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, நிலைமை சுமுகமடைந்தது.
No comments:
Post a Comment