July 21, 2016

இலங்கைக்கு சொல்வதை இந்தியா பின்பற்ற வேண்டும்! பா.சிதம்பரம்!

இலங்கைக்கு வழங்கும் ஆலோசனையை இந்தியா பின்பற்ற வேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா இலங்கைக்கு வழங்கும் அறிவுரைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என அவர் அறிவித்திருந்தார்.

காஸ்மீர் விவகாரத்தில் மத்திய மாநில அரசாங்கங்களின் அணுகுமுறை முற்றிலும் பிழையாகவே அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பெரும்பான்மை இனத்தவர்களின் தேசமாக மாறிவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment