June 2, 2016

வட்டக்கச்சி இராணுவ முகாம் அருகில் பாரிய குழி:பீதியில் இரரணுவம் !

கிளிநொச்சி – வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்
குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளமை தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி காணப்பட்டதாக கூறப்படும் குறித்த பகுதியில், 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர்.

எனினும் இராணுவத்தின் முகாம் இடமாற்றப்பட்டதையடுத்து கடந்த 29 ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறித்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் இன்று புதன்கிழமை அடையாளந் தெரியாதோரால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர்கள் குறித்த இடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணைகளும் நடைபெற்றுவருகின்றன.




No comments:

Post a Comment