June 2, 2016

மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் திடீர் தீ – விசாரணைகள் தீவிரம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற அமைக்கப்பட்ட தனியார் விடுதி
ஒன்றை திறந்துவைக்கும் நிகழ்வில் சந்தேகத்திற்கு இடமான தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை இரவு ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பிரதேசத்தில் இடம்பெற்றது.

ஷெங்ரிலா ஐந்து நட்சத்திர விடுதியின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு விடுதியை வைபவபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

இதனையடுத்து விடுதி வளாகத்தில் விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போதே அதன் அருகிலுள்ள ஓலையினால் செய்யப்பட்ட கூடாரமொன்றில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து தீயணைப்புப் பிரிவினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும் இந்த தீ பரவல் தொடர்பாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருப்பதோடு விசேட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment