May 21, 2016

இலங்கையில் போரை வெற்றி கொண்டாலும் சமாதானம் வெல்லப்படவில்லை!

இலங்கையில் தமிழர்கள் போர் முடிவடைந்து ஏழு வருடங்களாகியும்
இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர் என்று அமெரிக்காவின் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிரேஸ்ட அரசியல்வாதியான டான்னி கே டேவிஸ், இந்த நிலைமையை போக்கஇலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினர். எனினும் வலிமையான நடவடிக்கைகள் இல்லாமையால், தற்போது அந்த உறுதிமொழிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இலங்கை அரசாங்கம் மீளமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை இராணுவ விடயங்களில் நிபந்தனையுடன் செயற்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இலங்கையின் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நேற்று முன்தினம்நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றின் போதே இவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையில் சிங்களவர்களையும் தமிழர்களையும ஒன்றாக்குவதற்காகவே போரில் வெற்றி கண்டதாக கூறுகிறது.

எனினும் சமாதானம் இன்னும் வெல்லப்படவில்லை என்று டான்னி கே டேவிஸ் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையின் செயற்படுவதற்கான காலம் கனிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment