இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடும் என ஜனாதிபதியிடம் நேரடியாக அறிவித்திருப்பதாக நம்பகமாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு பேரவைக்குள் உள்வாங்குவதற்கென இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் ஆட்சி மன்ற உறுப்பினருமான
பி.பி.தேவராஜின் பெயரை பிரேரித்திருப்பதாக காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் அறிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறி
சேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசியலமைப்பு பேரவையில் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான பிரதிநிதி ஒருவர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்க்கால அரசியல் தேர்தல் களம் ஆகிய விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
இச்சந்திப்பு தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தீபத்திடம் கூறும்போது, அடுத்த தேர்தலில் மைத்திரி கூட்டணியின் கீழ் போட்டியிடுவதாக வாக்களித்துள்ளதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்-
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது அடுத்து இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் விரிவாக பேசப்பட்டது.
அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியிலேயே போட்டியிடுவதென்ற தீர்மானத்தையும் நாம் தெரிவித்துள்ளோம். அந்த வகையில் அடுத்து வரும் பொது தேர்தலில் இ.தொ.கா. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியில் போட்டியிடவுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி சந்திப்பு தொடர்பில் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் கூறுகையில்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று நாம் சந்தித்து பேசினோம். எமது மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
அது மாத்திரமின்றி பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அரசியலமைப்பு பேரவை தொடர்பிலும் பேசினோம்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கூறுவதெனில் இந்தியவம்சாவளி மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் தற்போது பெயரிடப்பட்டுள்ள பேரவையில் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை நாம் ஜனாதிபதிக்கு எடுத்து கூறினோம். மலையக மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அரசியல் கலாசாரம் அறிந்த ஒருவரான முன்னாள் அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் ஸ்தாபகரும் ஆட்சி மன்ற உறுப்பினருமான பி.பி.தேவராஜின் பெயரை நாம் பிரேரித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசிய போது அவர் பொறுப்பாக பதிலளிக்கவில்லை. இத்தகைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறி விளக்கமளிக்கப்பட்டதையடுத்து தேவராஜின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள விடயம் சம்பந்தமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே இணைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம். அத்துடன் எதிர்காலத்திலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் பேசப்பட்டது என்றார்.
தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடும் என ஜனாதிபதியிடம் நேரடியாக அறிவித்திருப்பதாக நம்பகமாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு பேரவைக்குள் உள்வாங்குவதற்கென இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் ஆட்சி மன்ற உறுப்பினருமான
பி.பி.தேவராஜின் பெயரை பிரேரித்திருப்பதாக காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் அறிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறி
சேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுசெயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அரசியலமைப்பு பேரவையில் இந்திய வம்சாவளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான பிரதிநிதி ஒருவர் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்க்கால அரசியல் தேர்தல் களம் ஆகிய விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
இச்சந்திப்பு தொடர்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தீபத்திடம் கூறும்போது, அடுத்த தேர்தலில் மைத்திரி கூட்டணியின் கீழ் போட்டியிடுவதாக வாக்களித்துள்ளதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில்-
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது அடுத்து இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் விரிவாக பேசப்பட்டது.
அத்துடன் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியிலேயே போட்டியிடுவதென்ற தீர்மானத்தையும் நாம் தெரிவித்துள்ளோம். அந்த வகையில் அடுத்து வரும் பொது தேர்தலில் இ.தொ.கா. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அணியில் போட்டியிடவுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி சந்திப்பு தொடர்பில் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் கூறுகையில்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று நாம் சந்தித்து பேசினோம். எமது மாகாண சபை உறுப்பினர்களை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் வகையிலேயே இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
அது மாத்திரமின்றி பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது. குறிப்பாக எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அரசியலமைப்பு பேரவை தொடர்பிலும் பேசினோம்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கூறுவதெனில் இந்தியவம்சாவளி மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் தற்போது பெயரிடப்பட்டுள்ள பேரவையில் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தை நாம் ஜனாதிபதிக்கு எடுத்து கூறினோம். மலையக மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் அரசியல் கலாசாரம் அறிந்த ஒருவரான முன்னாள் அமைச்சரும் கோப்பியோ அமைப்பின் ஸ்தாபகரும் ஆட்சி மன்ற உறுப்பினருமான பி.பி.தேவராஜின் பெயரை நாம் பிரேரித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசிய போது அவர் பொறுப்பாக பதிலளிக்கவில்லை. இத்தகைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறி விளக்கமளிக்கப்பட்டதையடுத்து தேவராஜின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள விடயம் சம்பந்தமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி எமக்கு தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே இணைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினோம். அத்துடன் எதிர்காலத்திலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் பேசப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment