June 5, 2015

அண்ணனின் கத்திக்குத்தில் தம்பி காயம்!

அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்கான தம்பியொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் ஏற்பட்ட தகராற்றினாலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மந்துவில் கிழக்கு குமிழ்க்கடைச்சந்தியில் நடந்த இந்த கத்திக்குத்தில் வேலாயுதம்பிள்ளை சிவகுமார் (40) என்பவரே காயமடைந்துள்ளார்.
அண்ணன் தம்பிக்கிடையில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையினாலேயே இந்த கத்திக்கத்து விழுந்ததாகவும், அண்ணனை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment