August 15, 2016

வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூல் அறிமுகம்!

த.ஜெயபாலன் எழுதிய தேசம் வெளியீட்டகத்தின் வட்டுகோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூல் அறிமுகம் நேற்று ஞாயிற்று கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.


கிளிநொச்சி திருநகர் லிட்டில் எய்ட் கணிணி பயிற்சி மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் இடம்பெற்றது.

கவிஞர் கருணாகரன், கவிஞர் பொன் காந்தன், கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம் ஆகியோர் அறிமுக உரையாற்றினார்கள்.

அத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும் உரையாற்றினார். பதிலுரையை நூலாசிரியர் த.ஜெயபாலன் நிகழ்த்தினார்.இந் நிகழ்வில் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், கல்வியலாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment