May 30, 2016

மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களது இறுதி நிகழ்வு-யேர்மனி!

பலத்த நெருக்கடிகள் நிறைந்த தமிழ் ஊடகத்துறையில் நாற்பதாண்டு காலம் நிலைத்திருந்து தாயகத்திலும் புலத்திலும் தனது இறுதி முச்சு இருக்கும் வரை பணியாற்றி விடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா
அவர்களது இறுதி நிகழ்வு நேற்றைய தினம் யேர்மனியில் உள்ள Oberhausen நகரில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்ட மக்கள் மத்தியில் நடைபெற்றது.
திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்கள் தமிழ் ஊடகத்துறையில் மட்டும் அல்லாது தான் புலம்பெயர்ந்து வாழ்ந்த தேசத்தில் தாயகத்துக்காகவும் ,தமிழ் மொழிக்காகவும் ஆற்றிய சேவையை உணர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி , தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி, சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் மற்றும் ஏனைய ஊடக சங்கங்கள் சார்பாகவும் இரங்கல் உரைகள் நிகழ்த்தப்பட்டு , அன்னாரின் உடலுக்கு மலரவளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதியாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட மக்களும் அன்னாரின் உடலுக்கு மலர் தூவி வணங்கி மூத்த ஊடகவியலாளர் திரு. விஜயரத்தினம் வரதராசா அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.

























No comments:

Post a Comment