August 20, 2016

சுன்னாகத்தில் வாள்வெட்டு - இளைஞர் படுகாயம்!

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
இந்தச் சம்பவத்தின் போது, இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment