August 6, 2016

காரைநகரில் பஸ் மோதி இளைஞர் பலி!

காரைநகர் பகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீது இ.போ.ச பஸ் மோதியதால் அதில் பயணம் செய்த இளைஞர் அந்த இடத்திலேயே மரணமானார்.
காரைநகர் வலந்தலைச் சந்தியிலிருந்து களபூமி வழியாக துறைமுகம் செல்லும் பாதையில் (786இலக்கம்) ஊரி பிட்டியோலைக்கு திரும்புகின்ற சந்திக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 
இவ்விபத்தினால் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது. பஸ் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவில்லை.




No comments:

Post a Comment