August 31, 2016

சுவாதி கொலை வழக்கு குறித்து பேஸ்புக் பதிவு… கைதாகி சிறையிலிருக்கும் திலீபனுக்கு சித்ரவதை… வழக்கறிஞர் புகார்….!

சுவாதி கொலையில் பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்பவருக்கு தொடர்பு உண்டு என்று பேஸ்புக்கில் பதிவு செய்த வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் திலீபன் மகேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து கருப்பு முருகானந்தம் திருவாரூர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து திலீபன் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந் நிலையில் அவரை  சிறையில் வழக்கறிஞர் கமருதீன் என்பவர் சந்தித்தார். இது குறித்து வழக்கறிஞர் கமருதீன் கூறும்போது, சுவாதி கொலையில் குற்றவாளிகள் இவர் தான் என்று சிலரைக் குறிப்பிட்டு பல பிரபலங்கள்  எழுதினர். ஆனால், இந்த வழக்கில் மிக ஆர்வமாகி, ராம்குமாரின் பெற்றோர், வழக்கறிஞர் என பலரையும் சந்தித்து சில தகவல்களை திரட்டி. அத்ன் அடிப்படையில் பேஸ்புக்கில் திலீபன் பதிவு செய்தார்.

அவர் எழுதியதை  வழக்கின் ஆதாரமாகக் கருதாமல், அதைப் பொருட்படுத்தாமல் இருந்த காவல்துறை, சம்பந்தமில்லாமல் திலீபனை கைது செய்தனர்.

மேலும் சிறையில் அவருக்கு பலவித சித்ரவதைகளை செய்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடைக்கப்பட்டுள்ள செல்லில் அவரை அடைத்து வைத்துள்ளனர்.. உரிய உடைகளை கொடுக்காமல் இழிவுபடுத்துகின்றனர். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment