August 20, 2016

முதலீட்டாளர் மாநாட்டில் மாகாணசபையைப் புறக்கணிக்கும் ஆளுனர்! - முதலமைச்சர் விசனம் !

யாழ்ப்பாணத்தில் நாளை மறுநாள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, மத்திய அரசாங்கம், மாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 
எனினும், தாம் இந்த மாநாடு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அறிவித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தாம் அவரை இந்த நிகழ்வுக்கு அழைத்தபோது அதற்கு அவர் மறுப்பு வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டின் வடமாகாண முதலீட்டாளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment