August 1, 2016

மஹிந்த மஹா சங்கத்தினரையும் பிளவுபடுத்த முயற்சித்தார் - நிரூபிக்கப்பட்டால் குடியுரிமை இழக்க நேரிடும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மஹா சங்கத்தினரையும் பிளவுபடுத்த முயற்சித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ,மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய முயற்சிக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஸ  கூறினால், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அது குறித்து விசாரணை நடத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு மஹிந்த, மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்தார் என்பது அம்பலமாகினால் அவர் குடியுரிமையை இழக்க நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வகையில் மஹா சங்கத்தினரை பிளவடையச் செய்வதனை தடுக்கும் சரத்துக்கள, புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment