August 6, 2016

நெடுந்தீவுக் கடலில் தத்தளித்த 3 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு!

நெடுந்தீவை அண்மித்த பகுதியில், இயந்திரக் கோளாறு காரணமாக படகுடன் நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 3 பேர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்களே மீட்கப்பட்டுள்ளனர். பின்னர், இந்திய கடலோர காவற்படையினரிடம் தகவல் தெரிவித்து சர்வதேச கடற்பரப்பு எல்லையில் மீனவர்களை ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment