July 18, 2016

யாழ்ப்பாண ஆலயங்களில் மிருக பலிக்கு தடை -நீதிபதி இளஞ்செழியன்!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் மிருக பலி பூஜையை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆலயங்களில் மிருக பலி பூஜைகளை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு, அகில இலங்கை இந்து மஹா சபையினர் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நீதிமன்றத் தடை உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment