July 24, 2016

ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு எச்சரிக்கை!

ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் விரைவாக்கத்திற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ற உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறும் பட்சத்தில், அதன்பொருட்டு போராட்டத்தை மேற்கொள்ளப் போவதில் தாம் பின்னிற்கப்போவதில்லை என ‘ஊழலுக்கான எதிரான குரல்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களை தெரிவித்து அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment