May 29, 2016

கிளிநொச்சியில் 9 கிளைமோர் குண்டுகள் கண்டெடுப்பு - தொடரும் தேடுதல்!

கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர் குண்டுகளை
57ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் எடுத்துள்ளனர்.இன்று (29) பிற்பகல் சுமார் 12 மணியளவில் 57ஆம் படைப்பிரிவினர் குறித்த தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஒரு கிளைமோர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டு 57ஆம் படைப் பிரிவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக கிளிநொச்சி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் எந்த நடவடிக்கைகளும் மேற் கொள்ளப் படவில்லை. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள நேரத்திலேயே இராணுவத்தினர் தமது தேடுதலை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்படி இன்று 12 மணியளவில் ஆரம்பித்து இதுவரை 9 கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இன்னும் தேடுதல் நடவடிக்கை முடிவடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் செல்லும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment