July 19, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு !

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிங்கள மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மாணவர்களை மீளவும் பல்கலைக்கழகத்திற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.


மாணவர்களும் அதிகாரிகளும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பின்புலத்தைக்கொண்ட மாணவர்கள் பிரச்சினைகள் எதுவும் இன்றி கல்வி நடவடிக்கைகளைத் தொடரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மெய்யான நல்லிணக்கத்தி;ற்கு தடை ஏற்படும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என வலியுறுத்தியுள்ளது.

சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகம் திரும்புமாறு கோரியுள்ளதுடன் அவர்களை ஏனைய மாணவர்கள் வரவேற்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

No comments:

Post a Comment