July 20, 2016

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழ் அகதி சடலமாக மீட்பு!

அவுஸ்திரேலியாவின் – மெல்போர்ண் – டன்டினொங் பகுதியில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் சடலமாக நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டார்.


வன்னி மாவட்டம் மல்லாவியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 36 வயதுடைய திருநாவுக்கரசு திருவருள்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நித்திரைக்குச சென்ற அவர், காலையில் சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற அவர், அதன் பின்னர் நாடு திரும்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment