July 25, 2016

தமிழீழ விடுதலைப்பு லிகள் பயங்கரவாதிகளாம் ! மனோ கணேசன் மீண்டும்கொக்கரிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென மைத்திரி ரணில் அரசாங்கத்தின் தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு காக்கைத்தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன், அங்கு ஊடகவியலாளர் சிலர்
எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, தமிழீழ விடுதலைப்புலிகளது பயங்கரவாதம் உட்பட அனைத்து பயங்கரவாதமும் ஒழிக்கப்பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அத்தடன் இந்த நாட்டில் நல்லிணக்கம் அவசியம் எனவும் இந்த நாட்டில் வாழும் சிங்களம், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் வெட்டிக்கொள்ளாமல், கொலைசெய்யாமல் நாம் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
அன்று அரச பயங்கரவாதம் இருந்தது. அரச சார்பற்ற பங்கரவாதம் இருந்தது. விடுதலைப் புலி பயங்கரவாதம் இருந்தது. அவை அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உண்மையான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.
ஏற்கனவே கிளிநொச்சியிலும் இதே கருத்தை தெரிவித்திருந்த அமைச்சர் அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்த தமிழ் ஊடகவியலாளர்கள் தன்னை சந்தித்து மதிப்பளிக்கவில்லையென சீற்றங்கொண்டிருந்ததுடன் இராணுவம் தேடி வரும் போது மைத்திரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பியுங்கள் என திட்டிதீர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment