June 22, 2016

வவுனியா பேரூந்து நிலைய கட்டிடத் தொகுதியில் முதியவரின் சடலம் மீட்பு!

வவுனியா பேரூந்து நிலைய கட்டிடத் தொகுதியில் இருந்து முதியவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.


வவுனியா, பிரதான பேரூந்து கட்டத்தொகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு முன்னால் சடலம் ஒன்று காணப்பட்டதைக் கண்ட வர்த்தகர்கள், வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பேரூந்து நிலையப் பகுதியில் தர்மம் கோருபவர் என அப் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment