June 13, 2016

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: மஹிந்த சமரசிங்க!

வடக்கில் இராணுவ முகாமகள் அகற்றப்படாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


கண்டி அஸ்கிரி மகாநயக்கரை சந்தித்தது ஆசி பெற்றுக்கொண்ட போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர் மேற்கொண்டு வருகின்றார். இராணுவ முகாம்கள் தொடர்ச்சியாக பேணப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னதாக வடக்கில் சிங்கள, முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மக்களை விரட்டியடித்தனர். தற்போது வடக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெர்மன் உதவியுடன் வடக்கில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமொன்று நிறுவப்பட உள்ளது, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்த உதவிக்கான அனுமதி கிடைத்தது.

சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில் சர்வதேச ரீதியில் நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு மீன்களை ஏற்றுமதி செய்வது குறித்து விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மீளவும் கிடைக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment