June 13, 2016

நான் கூறியதை கேட்டிருந்தால் இராணுவ முகாம் அழிந்திருக்காது:தினேஸ் குணவர்த்தன!

அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் இன்று கொஸ்கம இராணுவ முகாம் அழிந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


குறித்த இடத்தில் இராணுவ முகாமுக்கு பதிலாக மாணவர்களுக்காக தொழிற்பயிற்சி கூடத்தை நிறுவ சொல்லி அன்றைய ஆட்சியாளர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அதை அவர்கள் காதில் வாங்கவில்லை.

அதன் விளைவை இன்று அப்பாவி மக்கள் அனுபவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன் தினம் கொஸ்கம-சாலாவ பகுதிக்கு விஜயம் செய்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் எதிர்ப்பை வெளியிட்டது போலவே அன்று இந்தப் பிரதேச மக்களும் இங்கு முகாம் அமைப்பதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்.

ஆனால் எதுவும் பலனற்று போய் இன்று மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் துரித கதியில் மக்களை இங்கு குடியமர்த்தி அவர்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து கொடுக்குமாறும் நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் குறித்த வெடிப்பினால் சேதமடைந்த வீடுகள்,கட்டடங்கள் என்பவற்றை மீளமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கு தனது விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment