June 11, 2016

வவுனியாவில் காடுகள் அழிக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றம்! - சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு !

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வருகின்றார்.
ஆனால் வவுனியாவில் மடுக்குளம் என்னும் இடத்தில் ஆயிரம் ஏக்கர் காடுகள் நீண்டகாலமாக அழிக்கப்பட்டு வருவதுடன் விமானப்படையினரால் பெருந்திரளான சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 
நாடாளுமன்றத்தில் நேற்று வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment