June 21, 2016

கிளிநொச்சியில் படையினர் குவிப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் சந்தியை அண்மித்த பகுதியில், பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக
சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் பயன்பாடு அற்ற குறித்த காணியில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அங்கு நேற்று (திங்கட்கிழமை) இரவு முதல் பொலிஸார் காவல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று மாலை கிளிநொச்சி விசேட பொலிஸ் படையினரால் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment