June 11, 2016

இலங்கை கரையோரப் பாதுகாப்பு படையுடன் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு!

இலங்கை மற்றும் மியன்மார் கரையோரப் பாதுகாப்பு படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு இந்திய கடலோர காவற்படையினர்
புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட இருப்பதாக இந்திய கடலோர காவற்படையினரின் பொதுப் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் தென் கொரியா கடலோர காவற்படையினரின் கூட்டுப் பயிற்சியை மேற்பார்வையிட கலந்து கொண்ட போதே இந்திய கடலோர காவற்படையினரின் பொதுப்பணிப்பாளர் ராஜேந்திர சிங் இதனை கூறியுள்ளார்.

இதன் போது ஏற்கனவே 6 நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும்,இலங்கை மற்றும் மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment