June 29, 2016

அனைத்து இலங்கையர்களுக்கும் சமவுரிமைகள் கிடைப்பதற்காக அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்கும்!

அனைத்து இலங்கையர்களுக்கும் சமவுரிமைகள் கிடைப்பதற்காக அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசப் தெரிவித்துள்ளார்.


அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமை, சம சந்தர்ப்பங்கள், சகல நலன்களையும் அனுபவிக்கக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் பொருளாhரத்தைக் கட்டியெழுப்பவும், நல்லாட்சி முனைப்புக்களுக்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் முன்னோக்கி நகர்ந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.


நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்தல், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுதிமொழிகளை நிறைவேற்றுதல் ஆகியன குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment