June 21, 2016

இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி. வீரமணி பேட்டி

இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியாவுக்குள் ஈழத் தமிழர்களை அனுமதிக்காதது வேதனைக்குரியது. மனித நேயம் இல்லாமல் இந்தோனேசியா அரசு நடந்துள்ளது.

இப்பிரச்சனையில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் இந்தோனேசியாவில் உள்ள இலங்கையின் தமிழ் அகதிகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு கடந்த சட்ட பேரவையில் இயற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment