June 21, 2016

அநுர சேனநாயக்கவை இரகசியமாக பார்வையிட்ட யோசித்த!

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கின் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவை, மஹிந்த ராஜபக்ஸவின் மகனான யோசித்த நேற்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான உதயகம்மன்பிலவை பார்வையிட நேற்றைய தினம் பலர் வெளிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற நிலையில் கம்மன்பிலவை பார்வையிட சென்றுள்ள யோசித்த வைத்தியசாலையில் உள்ள அநுரசேனநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அநுரசேனநாயக்க தற்சமயம் பொலிஸ் பாதுகாப்புடன் ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அநுரசேனநாயக்க குறித்த விளையாட்டு வீரர் கொலை வழக்கின் சில தகவல்களை எதிர்வரும் விசாரணைகளின் போது நீதிமன்றில் தெரிவிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அநுர சேனநாயக்க நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ள நிலையில்,அன்றைய தினம் இவரது வாக்குமூலங்கள் பல புதிர்களுக்கு விடையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment