June 29, 2016

"இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'! எலிசபெத் மாகாராணியின் நகைச்சுவை பதில்!

பிரித்தானியாவின் முடிக்குரிய ராணி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என 52 வீதமான அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அந்நாட்டை மட்டுமல்லாது, உலக அரசியலிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்ட வட அயர்லாந்துக்கு ராணி எலிசபெத் இரண்டு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அயர்லாந்து துணை பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ் ராணி எலிசபெத் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்துள்ளார்.

இதன் போது ராணி எலிசபெத் அவர்களிடம் அயர்லாந்து துணை பிரதமர் நலம் விசாரிக்க அதற்கு ”இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'' என்று நகைச்சுவையாக ராணி பதிலளித்துள்ளார்.

No comments:

Post a Comment