நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டிலும் கி.சாரதாதேவியின் தலைமையிலும் குமுதினி படுகொலை நினைவாக
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குமுதினி படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவையொட்டி, நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கடந்த 14ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் குமுதினி உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவு கூறும் வகையிலேயே 700 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி கி.சாரதாதேவியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு இந்தத் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.
இந்த தென்னங்கன்றுகள் வடமாகாண விவசாய அமைச்சுக்குச் சொந்தமான கிராஞ்சிப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நல்லினக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குமுதினி படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவையொட்டி, நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கடந்த 14ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் குமுதினி உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவு கூறும் வகையிலேயே 700 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி கி.சாரதாதேவியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு இந்தத் தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்கள்.
இந்த தென்னங்கன்றுகள் வடமாகாண விவசாய அமைச்சுக்குச் சொந்தமான கிராஞ்சிப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நல்லினக்கன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment