May 28, 2016

தமிழர்களே நீங்கள் முட்டாள்கள் தான் பறைசாற்றும் சினி‬ ‪‎உலகம்‬!

தமிழர்களை முட்டாள்கள் என்றே நினைத்து எப்படியெல்லாம் போலியான செய்திகளை பரப்புகின்றார்கள்.இதை வாசித்து உண்மை என்று நம்பும்
ஒருகூட்டமும் எம்மில் உள்ளார்கள் என்று தெரிந்தே தான் இவ்வாறான செய்திகள் பரப்பபடுகின்றன. தரமற்ற யாரும் ஊடகத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த ஒரு செய்தியும் எடுத்துக்காட்டே...
இந்த காணொளியில் காட்டபட்ட பதிவின் கடைசி செக்கனில் ஏற்படும் சத்தமும், இவ்வளவு பெரிய மாடிக்கு அந்த பெண் எப்படி ஏறினார் என்ற கேள்வியும் மேலிருந்து வந்து விழும் உடல் அப்படி துள்ளி விழாது என்பதும் அவ்வளவு உயரத்தில் இருந்து வரும் உடல் எங்கும் மோதாமல் நேராக பூமியை நோக்கி விழுமா என்பதும் பாரிய சந்தேகங்களுக்கு உள்ளாவதால் இது போலி காணொளி என்றே நம்ப தோன்றுகின்றது..
மேலை நாடுகளில் தம்மை அறிவாளி என்று காட்டும் லங்கா ஸ்ரீ குழுமத்தின் சக குழுமமான சினி உலகத்தின் இந்த செய்தியை எமது கலைஞர்களின் பார்வைக்கு விடுகின்றோம்
ஈழத்து_சினிமா_சாதனையும்_வேதனையும்‬ இது மாற்றத்துக்கான வழி
என்றும் அன்புடன்
அனேகா

No comments:

Post a Comment