May 25, 2016

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய ரிசாத் !

வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொடிகஹவத்தை மக்கள் தங்கியிருக்கும் கொடிகஹவத்த விமலாராம விகாரை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கும், கொலன்னாவை
வித்யவர்தன மஹா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வெள்ள அகதிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/05/2016) நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அமைச்சருடன் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான ஹுசைன் பைலா, ரியாஸ் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர்.




No comments:

Post a Comment