May 24, 2016

ஒன்ராறியோவில் ஓரே நாளில் போதையில் வாகனம் செலுத்திய 41பேர் கைது!

ஒன்ராறியோ மாகாணம் முழுவதும் விக்டோரியா தின வார இறுதி நாளான நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) இரவு மட்டும் 41 பேர் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் இரு முதியவர்கள் அடங்குவதாகவும், இவர்களது வாகனங்கள் ஏழு நாட்களிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகோட்டுபவர்களையும் இந்த விடுமுறை காலத்தில் கவனமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். நீர் இன்னமும் குளிராக உள்ளதனால் பாதுகாப்பு அங்கி அணியவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் இந்த வருடம் எட்டு பேர் படகோட்டும் போது உயிரிழந்துள்ளதுடன், இவர்களில் எவரும் பாதுகாப்பு அங்கி அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment