May 24, 2016

மே 25ல் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் இளைஞர் கொடிதின நிகழ்வு!

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டபிள்யு.ஜீ .எஸ் எரந்திகவின் வழிகாட்டலின் கீழ் தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஒன்றிணைந்த அமைப்பான ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 2016ம் ஆண்டுக்கான இளைஞர் கொடி தின நிகழ்வு கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் மே மாதம் 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 30ம் திகதி முடிவடையும் என கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் தெரிவித்துள்ளார்.
பிரதேச இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைக்காக ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு எமது இளைஞர்கள், பிரதேச மக்களை சந்திக்கவும் இளைஞர் கொடியினை அணிவிப்பதற்காகவும் கோரளைப்பற்று பிரதேசத்தில் வருகை தரவுள்ளனர். எனவே அவர்களை பூரண ஒத்துழைப்பிணை வழங்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment