September 15, 2015

கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்படாமையினை கண்டித்து நெடுந்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்(படங்கள் இணைப்பு)

கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் வழங்கப்படும் துறைசார் உபகரணங்கள் வழங்கப்படாமையினை கண்டித்து இன்று யாழ்.நெடுந்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டு மானிய விலையில் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இது மற்றைய மீனவர்களுக்கு வழங்கப்பட்டபோதும் நெடுந்தீவு மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமக்கு அந்த உதவிகளை வழங்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் வடமாகாணசபை உறுப்பினர் க.விந்தனும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment