September 15, 2015

கோப்பாய் பிரதேச அச்செழு இந்து மயான கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்செழு இந்து மயான கிணற்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டும் மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் உபகரணமும் பொது மக்களால் மீட்கப்பட்டுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா திட்டத்தின்கீழ் அச்செழு இந்து மயானம் துப்பரவு செய்யும் பணியின் கீழ், மயானக்
கிணறும் துப்பரவு செயயும் பணி பொதுமக்களால் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தூர்ந்துபோன கிணற்றை துப்பரவும் செய்யும் வேளையில், கிணற்றில் உள்ள சேற்றில் புதைந்து இருந்த வெடிக்காத நிலையில் காணப்பட்ட கைக் குண்டையும் மற்றும் துப்பாக்கி உதிரிப்பாகத்தையும் பொது மக்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
கிராம அலுவலர் மூலம் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து பொலிசார் இராணுவத்தினருடன் வந்து குறிப்பிட்ட இரண்டு பொருட்களையும் மீட்டுச்
சென்றுள்ளார்கள்.

No comments:

Post a Comment