September 15, 2015

சந்தேகத்திற்குரிய இலங்கைப் படகு தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு!

கைவிடப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கிடமான இலங்கை கண்ணாடியிழை படகு ஒன்று தமிழ்நாட்டில் வேதாரண்யம் கடற்கரைக்கு அருகே நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சந்தேகத்திற்குறிய படகானது, மணியன் தீவில் மிகுந்த பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு ஹெச்பி யமஹா இயந்திரம் பொருத்தப்பட்ட இப்படகானது, பதிவு எண் இல்லாமல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீன் வலை, குடிநீர் போத்தல் மற்றும் படகின் உள்ளே இலங்கையின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இப்படகு இலங்கையினை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதாராண்யம் கடலோர பாதுகாப்பு குழு மற்றும் தமிழ்நாடு பொலிஸ் கியூ பிரிவு ஆகியவை இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment