September 23, 2015

ஒட்டாவாவில் துப்பாக்கிசூடு. ஒருவர் மரணம். சந்தேக நபரை தேடி பொலிசார் !

கனடா- ஒட்டாவா வலியில் வில்நொ பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிடிபடவில்லை.
ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் ஆயுதமேந்திய சந்தேக நபர் அப்பகுதியில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். பொலிசார் அப்பகுதி மக்களை எச்சரித்துள்ளனர். அனைவரையும் அவரவர் வீடுகளிற்கு இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகதிதிற்கிடமான நடவடிக்கைள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டால் உடனடியாக பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். அவசரநிலை பிரதிசெயல் அணி மற்றும் ஒன்ராறியோ மாகாண பொலிசார் அடங்கிய ஒரு கட்டுபாட்டு தளம் அப்பகுதியில் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகின்றது. அப்பகுதியை சுற்றி பொலிஸ் வாகனங்கள் நிறைந்து சென்று கொண்டிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment