September 26, 2015

மஹிந்தவை தூக்கிலிட வேண்டும்; மதுரை ஆதீனம்!

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை குற்றவாளியாக அறிவித்து, தூக்கிவிட வேண்டும் என மதுரை ஆதீனம் தகவல் வெளியிட்டதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய
ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. ஈரோடு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடையே ஐ.நா விசாரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே இந்த கருத்தை முன்வைத்துள்ளனர். தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய நாடுகள் சபை குற்றவாளி என அறிவித்து அவரை தூக்கில் போடவேண்டும். அப்போதுதான் அநீதி இழைக்கின்ற உலக நாடுகளுக்கு தக்கதொரு பாடமாக இது அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment