September 18, 2015

பேரூந்துப் போக்குவரத்து இல்லாமையினால் களிக்காடு கோடாலிக்கல்லு விவசாயிகள் பரிதவிப்பு!

முல்லைத்தீவு வவுனியா பேரூந்து மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பேரூந்துகள் நெடுங்கேணியில் இருந்து ஒட்டுசுட்டான் ஊடாக பயணம் செய்வதனால் நெடுங்கேணி முள்ளியவளை ஊடாக முல்லைத்தீவு மார்க்கத்தில் (B296) இருக்கிண்ற பிரதேசங்களான
கோடாலிக்கல்லு களிக்காடு பெரிய இத்திமடு,தண்டுவான், பழம்பாசி வாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ் மார்க்கத்தில் இரண்டு பேரூந்து சேவைகள் நடைபெற்றபோதும் அதுவும் சிராக நடைபெறுவதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் பிரதேச மக்கள்.
முள்ளியவளையில் இருந்து விவசாயத்திற்காக களிக்காட்டுக்கு வரும் விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரியவருவதுடன். பேரூந்து வசதியை குறித்த மாhர்க்கத்தில் சீராக்கக் கோரி விரைவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நெடுங்கேணிப்பகுதியில் மேற்கொள்ள உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment