September 18, 2015

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இரவு ரயிலில் மோதி யானை ஒன்று பலி!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ரயிலில் மோதி யானை ஒன்று பலியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் குறித்த யானை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது. குறித்த ரயிலில் மோதுண்ட யானைஇ சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

‘யானைகள் குறுக்கிடும் பகுதி’ என அடையாளமிடப்பட்டுள்ள பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த இடத்தில் ரயிலில் மோதுண்டு இதுவரை மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

No comments:

Post a Comment