September 13, 2015

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு மன்னாரில் வரவேற்பு(படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவிற்கு மன்னாரில் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.இவ்வரவேற்பு நிகழ்வினை இன்று மகளிர்
அமைப்புக்கள் இணைந்து  ஏற்பாடு செய்திருந்தன.மன்னார் மாவட்ட பெண்கள் சமாசம் ஏற்பாடு செய்த குறித்த நிகழ்விற்கு அதன் தலைவி ஏ.மல்லிகா தலமை தாங்கினார்.மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்கேதீஸ்வரம் கோவில் நிர்வாக சபை பிரமுகர் பொறியியலாளர்  ராமகிருஸ்ணன், அருட்சகோதரி ரூபராணி, தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.சிவகரன், விழுது நிறுவனத்தின் மன்னார் இணைப்பாளர் எச்.ஜே.டலிமா, பெண்கள் அமைப்பின் பிரமுகர்  ஜெசி, முன்னாள் மன்னார் நகரசபையின் செயலாளர் எஸ்.ஏ. ராஜேஸ்வரி மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று முற்பகல் கற்கடந்தகுளம், மடுக்கரை பகுதியிலும் மாலை 4:30 மணியளவில் பேசாலையிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு அக்கிராம மக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment