சிறுவர், பெண்கள் மீதான துஸ்பிரயோகத்திற்கு எதிராக சிறுவர்களை உயிர்போல் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று அமைதியான ஊர்வலம் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப் பேரணி வவுனியா நகர வீதி வழியாக சென்று பேரூந்து தரிப்பிடத்தில் நிறைவடைந்தது.
இப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பிள்ளைகளை உயிர்போல் காப்போம் எனும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இப்பேரணியில் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment