September 23, 2015

காலிக் கடற்கரையோரத்தில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு!

காலி கடற்கரையோரப் பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.தேசிய கடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டின் பேரில் இன்று காலிக் கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
பிரதேசத்தின் பாடசாலை மாணவர்கள், சமூக சேவையாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் கடற்படையினர் இந்த சிரமதான முயற்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது காலிக் கடற்கரையோரமாக மண்ணுக்குள் புதைந்த நிலையில் இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment